Monday 25 April 2016

நமசிவாய நாதம்!

நமசிவாய நாதம்!
(a #moetry*)
.
அம் என விரியும் பார்வை
உம் என நுகரும் வாசம்
இம் என இனிக்கும் அறுசுவை
ஆம் என அணைக்கும் தொடுகை
ஓம் என ஒலிக்கும் ஒலியென
ஐம்புலன் மூலம்
அறிவது தாண்டி
...
ம் என விரியும் சிந்தையின்
எண்ணிலா எண்ணம் தாண்டி
...
தனதை ஒதுக்கித்
தானை அடக்கித்
தன்னுள் தேடித்
தவத்தில் அடங்க
...
வெறுமையின் பரப்பில்
அமைதியின் ஒலியில்
அருவத்தின் வடிவில்
இருளின் ஒளியில் 
அருளின் தழுவலில்
அகத்துள் அறிவது
...
பெரு வெடித் தொடக்க் 'அ'
பரம் இகத் தொடர்வ் 'உ'
பேரூழ் அழி முடிவு 'ம்'
...
சுற்றும் காலச் சுழலின் வெளியில்
...
'ந' கரும் மறுபடி நேரம்
'ம' லரும் மற்றொரு உலகம்
'சி' தறும் உயிர் பல உருவம்
'வா' ழும் அவை பின் தேடி
'ய' றியும் மெய் தம் உள்ளே
...
அ உ ம் என
அகிலம் அனைத்தும்
நமசிவாய எனும்
நாதனின் நாதம்!

.

~ @PrakashSwamy

* 'm'obile p'oetry' - good ol' #poem, crafted on #mobile devices!

Try swamyem.blogspot.in for more enchanting #poems by Swamy, aka #swamyem! 😌

No comments:

Post a Comment